PSBB பள்ளியில் ஆசிரியர் தன்னிடம் பயிலும் மாணவிகளிடம் அத்துமீறி நடந்துகொண்ட விவகாரம்,தற்போது மிகப்பெரிய பேசுபொருளாக எல்லா இடங்களிலும் மாறியுள்ளது.
இந்நிலையில் நடிகர் கவுண்டமணி அவர்கள் இதுகுறித்து டுவிட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, "பள்ளியில் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட நபர் மீது அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்"என பதிவிட்டுள்ளார்.
கவுண்டமணி அவர்கள் பெரும்பாலாக பொதுநிகழ்ச்சிகள் மற்றும் பேட்டிகளில் கலந்து கொள்ள விரும்பமாட்டார்.பெரிய ஸ்டார் என்று பந்தா காட்டாமல் எதார்த்தமாகவே இருப்பார்.அவ்வப்போது சமூகத்தில் நடக்கும் அவலங்கள் குறித்து,கருத்துக்கள் பதிவிட்டு வருவார்.
அண்மையில் தான் மக்களுக்காக "கொரோனா வைரஸ் சாதாரண நோய் இல்லை.எனக்கு முன்னால் மக்கள் இறப்பதை நான் பார்க்கிறேன் என்று வேதனை தெரிவித்துள்ளார்.மேலும்,தயவுசெய்து தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என்றும் அவசரமாக இருந்தால் மட்டுமே வெளியே வாருங்கள்"என்ற உருக்கமான டுவிட் ஒன்றை பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று தனது 81-ஆவது பிறந்தநாளை கொண்டாடும் கவுண்டமணி அவர்கள் பெண் குழந்தைகளுக்கு ஆதரவாக டுவிட் போட்டிருப்பது,ரசிகர்கள் மத்தியில் பெருமிதத்தை ஏற்படுத்தியுள்ளது.