Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
14
இஞ்சியில் கூட கலப்படமா ?

sooriyan FM Gossip - இஞ்சியில் கூட கலப்படமா ?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

897 Views
கொரோனா பெருந்தொற்று நேரத்தில் நமக்கு கைகொடுக்கும் அதிமருந்து என்றால் இஞ்சிதான்.
இதன் அதிக சந்தைப்படுத்துதல் காரணமாக மார்க்கெட்டில் போலியான இஞ்சி விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கின்றனர். குறிப்பாக மலை வேர்களை இஞ்சி எனக் கூறி விற்பனை செய்வதாகக் கூறப்படுகிறது.

இஞ்சி சாறை பாலில் கலந்து பருகுவதன் மூலம் வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் குணமடைவதோடு உடம்பும் இளைக்கும்.

மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி போன்ற எண்ணற்ற பிரச்சனைகளை குறைப்பதில் இஞ்சி முக்கிய பங்கு வகிக்கிறது. இது உண்மையான இஞ்சியாக இருக்கும் பட்சத்தில்தான் இத்தனை நன்மைகளும் கிடைக்கும் .

வாசனையை நுகருங்கள்

இஞ்சி வாங்கும்போது அதன் தோலை நகத்தால் கீறிப் பாருங்கள். அதன் வாசனை மூக்கை துளைக்கும் அளவு இருப்பின் அது உண்மையான இஞ்சி.

அந்த இஞ்சியின் வாசனையை துடைத்த பின்பும் விரலில் நீடித்திருக்கும்.

அதுதான் நல்ல இஞ்சியும் கூட எந்தவித வாசனையும் இல்லை அல்லது வாசனை மிதமாக இருந்தால் வாங்காதீர்கள்.

இஞ்சியின் தோலை கவனியுங்கள்

இஞ்சித்தோலை நகத்தால் கீறியதுமே எளிமையாக நீங்கும். ஏனெனில் இஞ்சி தோல் மென்மையாக இருக்கும். அதுவே கடினமாக இருந்தால் அது போலியான இஞ்சியாக இருக்கலாம்.

சுத்தமான இஞ்சியை வாங்காதீர்கள்

இஞ்சி மீது மண் படிந்திருந்தால்தான் அது இயற்கையான இஞ்சியாக இருக்கும். மண் இல்லாமல் சுத்தமாக இருக்கிறது எனில் அது ஆரோக்கியமற்ற இஞ்சியாக இருக்கலாம்.

அதாவது இஞ்சியில் உள்ள மண் நீங்கி சுத்தமாக இருக்க நச்சு உண்டாக்கும் அமிலங்களில் ஊற வைத்து சுத்தம் செய்து விற்கின்றனர். எனவே அதை வாங்கி சமைப்பதில் எந்த பலனும் இல்லை.

இஞ்சி வாங்கி வந்ததும் நீங்கள் செய்ய வேண்டியவை

இஞ்சியை வாங்கி வந்ததும் அப்படியே எடுத்து குளிரூட்டியில் வைக்காதீர்கள். அதை தண்ணீரில் கழுவி மண்ணை நீக்கிவிட்டு தோலை நீக்கிவிட்டு வையுங்கள் அல்லது அரைத்து டப்பாவில் அடைத்து வைத்தால் வாசனை நீங்காமல் இருக்கும். பயன்படுத்தவும் எளிமையாக இருக்கும்

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top