இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தின் சகரான்பூரில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள தோட்டத்தில் அதிசய மாமரம் ஒன்று வளர்ந்துள்ளது.
முகலாய மன்னர்கள் காலத்தில் நிறுவப்பட்ட இந்த தோட்டத்தில் வேளாண் கல்வி மாணவர்களுக்காக பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த தோட்டத்தில் சுமார் 10 வருடங்களுக்கு முன் 121 வகையான மாமரக்கன்றுகள் ஒன்றாக இணைத்து நாட்டப்பட்டிருந்தன. இந்த நிலையில் தோட்டத்திலுள்ள ஒரு மரத்தில் 121 வகையான மாம்பழங்கள் காய்த்துள்ளன.
இது அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. குறித்த மரத்தில் தசேரி, லங்கடா, சௌசா, ராம்கீலா, அமர்பாலி, சஹரான்பூர் அருண், சகரான்பூர் வருண், எல்.ஆர்.ஸ்பெஷல், ஆலம்பூர் உள்ளிட்ட 121 வகை மாம்பழங்கள் உள்ளன.
இந்த அதிசய மரத்தை பற்றி அறிந்து அதை காண பல இடங்களில் இருந்து மக்கள் வருகை தந்த வண்ணமுள்ளனர்.