Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
04
கொரோனா முத்தம் - புலிட்சர் பரிசு வென்ற புகைப்படம்

sooriyan fm - கொரோனா முத்தம் - புலிட்சர் பரிசு வென்ற புகைப்படம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,024 Views
'ஒரு முத்தத்தால் வாழ்க்கையின் மகத்துவத்தையும், அன்பின் ஆற்றலையும் இத்தனை வலுவாக சொல்லிவிட முடியுமா?' என வியக்க வைக்கும் அந்தப் புகைப்படத்தை பார்த்தால் நெகிழ்ந்து போவீர்கள் என்பது நிச்சயம்.
அந்தப் படத்தை எடுத்த புகைப்பட கலைஞர்தான் இந்த ஆண்டுக்கான புலிட்சர் பரிசை வென்றிருக்கிறார்.

வலி மிகுந்த காலத்தில் அன்பின் செய்தியை அழுத்தமாக உணர்த்தும் அந்தப் புகைப்படத்தின் நாயகனும், நாயகியும் - ஒரு தாத்தாவும், பாட்டியும் என்பதுதான் விஷயம்.

ஆம், கொரோனா பாதிப்புக்கு மத்தியில் 80 வயதை கடந்த அந்த வயதான தம்பதி முத்தம் கொடுத்துக்கொள்ளும் காட்சியைதான் எமிலியோ மெரநேட்டி (Emilio Morenatti) எனும் அந்த புகைப்படக் கலைஞர் படம் எடுத்திருக்கிறார்.

கடந்த ஆண்டு உலகை கொரோனா உலுக்கியபோது மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான ஸ்பெயினில் கொரோனா பாதிப்பை தொடர் புகைப்படங்களாக பதிவு செய்த மொரனேட்டி எடுத்த படங்களில் ஒன்றுதான் வயதான தம்பதியின் முத்தம்.

அந்தப் படத்தை எடுத்தபோது, கமராவுக்குப் பின் கண்ணீர் சிந்தியதாக அவர் நெகிழ்சியுடன் கூறியிருக்கிறார். அவர் மட்டும் அல்ல, அந்த படம் எடுக்கப்பட்டபோது அங்கிருந்த செவிலியர்கள் உள்ளிட்டோரும் கண்ணீரில் நனைந்திருக்கின்றனர்.

ஏனெனில் அந்தக் காட்சி உள்ளத்தை உருக வைப்பதாக இருந்தது.

85 வயதான பாஸ்கல் பரேசும், 82 வயதான அகஸ்டினா கனமேராவும் 60 ஆண்டுகளுக்கும் மேலாக திருமண பந்தத்தில் இணைந்திருப்பவர்கள். கொரோனா பேரிடர் சோதனையால், அன்பான கணவன், மனைவி இருவரும் பிரிந்திருக்கும் நிலை உண்டானது.

இப்படி 100 நாட்கள் பிரிந்திருந்த பிறகு, இருவரும் பார்த்துக்கொண்டபோது, அந்த வயதான தம்பதியர் முத்தம் கொடுத்து தங்கள் அன்பை பரிமாறிக்கொண்டனர்.

நோய்த்தொற்று பாதுகாப்பிற்காக முககவசம் அணிந்த நிலையில், உடலில் பிளாஸ்டிக் உறை அணிந்தபடி, அந்த தாத்தாவும் பாட்டியும் கொடுத்துக்கொண்ட இந்த நீண்ட முத்தம் அப்படியே காலத்தை உரைப்பதாக கமராவில் பதிவானது.

இந்தப் படம் உள்ளிட்ட கொரோனா காலத்தை பதிவு செய்யும் புகைப்பட வரிசைக்காக மொரனேட்டி புலிட்சர் பரிசு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top