’ராஜாராணி’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனர் அட்லி அறிமுகமாகி அதன் பின் தளபதி விஜய் நடித்த ’தெறி’ ’மெர்சல்’ மற்றும் ’பிகில்’ ஆகிய மூன்று சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் அடுத்ததாக அவர் ஷாருக்கான் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் என்பதும் இந்தப் படத்திற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அட்லி மற்றும் ப்ரியா அட்லி ஆகிய இருவருமே சமூக வலைதளங்களில் அக்டிவ்வாக உள்ளவர்கள் என்பதும் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் இருவருக்கும் ஏராளமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் சற்று முன் ப்ரியா அட்லி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது செல்ல நாய்க்குட்டியின் ஐந்தாவது பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.
அட்லி மற்றும் ப்ரியா அட்லி தங்கள் செல்ல நாய்க்குட்டியின் பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.