துபாயிலுள்ள நாத் அல் செபா பகுதி அருகே, மிக ஆழமான நீச்சல் குளம் கட்டமைக்கப்பட்டுள்ளது.
துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் இந்த நீச்சல் குளத்தைத் திறந்து வைத்து பார்வையிட்டார்.
டீப் டைவ் என்ற நிறுவனம் இந்த நீச்சல் குளத்தை அமைத்துள்ளது. இந்த நீச்சல் குளம் 197 அடி (60 மீட்டர்) ஆழம் கொண்டது.
இந்த நீச்சல் குளத்தில் நீர்மூழ்கி வீரர்கள் பயிற்சி பெறுவதற்கும் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆழமான நீச்சல் குளத்தின் அளவை கின்னஸ் சாதனை நிறுவனம் உறுதி செய்துள்ளது. விரைவில் இதற்கான சான்றிதழ் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமீரகத்தின் முத்து குளித்தல் பாரம்பரியத்தை நினைவு கூறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த நீச்சல் குளத்தை பார்வையிட சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.