பிரபல பொலிவூட் நடிகையான கரீனா கபூர் மீது மத நம்பிக்கையை புண்படுத்திய குற்றச்சாட்டில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரபல இந்தி நடிகை கரீனா கபூருக்கு கடந்த மாதம் ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் தனது கர்ப்பகால அனுபவங்களை தொகுத்து கரீனா கபூர் புத்தகம் ஒன்றை எழுதி கடந்த ஜூலை 9 ஆம் திகதி வெளியிட்டார்.
“பிரக்னன்சி பைபிள்” என பெயரிடப்பட்ட அந்த புத்தகத்தை அவர் தனது 3-வது குழந்தை என குறிப்பிட்டு இருந்தார்.
இந்த புத்தகத்தின் தலைப்பில் உள்ள “பைபிள்” என்ற வாசகம் கிறிஸ்தவ மத நம்பிக்கையை புண்படுத்துவது போல அமைந்துள்ளதாக ஒமேகா கிறிஸ்டியன் மகாசங் என்ற அமைப்பு மராட்டிய மாநிலம் பீட்டில் உள்ள சிவாஜிநகர் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளது.
இதனை அடுத்து முறைப்பாடு குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இந்திய காவல்துறை தெரிவித்துள்ளது.