இவர்கள் இருவரும் இணைந்து நடித்தால் அவரது ரசிகர்கள் இடையே இருக்கும் பிரச்சினை தீரும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால் அது எப்போது நடக்கும் எனத் தெரியவில்லை.
இவர்கள் இருவரும் இணைந்து பாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதனை தனுஷ் தான் தவற விட்டுள்ளார்.
சிவகார்த்திகேயன் மற்றும் விமல் நடிப்பில் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் இடம்பெற்ற ஒரு பொறம்போக்கு பாடலை சிம்புவும் யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து பாடினர்.
ஆனால் இந்த பாடலை சிம்புவும் தனுஷும் இணைந்து பாட வேண்டியது. அப்போது தனுஷ் மரியான் படப்பிடிப்பிற்காக வெளிநாட்டில் சிக்கிக் கொண்டதால் இந்த வாய்ப்பை தவறவிட்டார்.
அதன் பிறகு தான் தனுஷூக்கு பதிலாக யுவன் சங்கர் ராஜா இந்தப் பாடலை பாடியுள்ளார்.