சிலருக்கு சருமத்தில் எப்பொழுதும் எண்ணெய் வழிந்து கொண்டேயிருக்கும். அப்படிப்பட்டவர்கள் இந்த வழிமுறைகளை கையாண்டு பாருங்கள். நல்ல பலன் கிடைக்கும்.
ஒரு ஸ்பூன் முல்தானி மெட்டி, ஒரு ஸ்பூன் சந்தானம் மற்றும் தேவையான அளவு காய்ச்சாத பசும்பால் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
இந்த கலவையை சருமத்தில் பூசி பின் இருபது நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும். பின் குளிர்ந்த நீரால் சருமத்தை கழுவ வேண்டும்.
இவ்வாறு வாரத்தில் இரண்டு முறை செய்து வர சருமத்தில் வடியும் எண்ணெய் பசை நீங்கி பட்டுப்போல் பளபளக்கும். அதேபோல் ரோஸ் வாட்டர் சரும அழகை அதிகரிக்க மிகவும் பயன்படுகிறது.
எனவே இரண்டு ஸ்பூன் வாட்டருடன் இரண்டு ஸ்பூன் காய்ச்சாத பால் சேர்த்து நன்றாக கலந்து சருமத்தில் பூச வேண்டும். பின்பு பத்து நிமிடம் கழித்து சருமத்தை கழுவ வேண்டும்.
இவ்வாறு தினமும் செய்துவர சரும செல்களுக்கு புத்துணர்ச்சி கிட்டுகிறது. சருமமும் அழகு பெறுகிறது.
அதேபோல இரவில் தூங்கும் முன் தேன், குங்குமப்பூ, மஞ்சள் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வந்தால் உடல் மினுமினுப்பாகும் . மேலும் உடல் அழகும் பெறும் .