பற்குழிகள் மற்றும் உடைந்த பற்கள் போன்றவற்றால் பற்களின் ஈறுகள் மற்றும் வேர்களுக்கிடையில் சீரற்ற நிலை ஏற்படுவதால் மிகவும் கடினமான வலி ஏற்படுகிறது.
பற்களில் பக்டீரியாக்கள் அதிகமாக பெருகி பற்களை தாங்கும் எலும்புகளில் தொற்றுக்களை ஏற்படுத்துகின்றன. இதற்கு முக்கிய காரணம் இனிப்பு சுவையுள்ள உணவுகளை அதிகம் உண்பதாகும்.
அதேபோல் எந்த வகையான உணவுகளை சாப்பிடடாலும் வாய் கொப்பளிக்காமல் இருப்பதும் ஒரு காரணமாகும். தினமும் காலையில் உப்பு கலந்த நீரை வாயினுள் ஊற்றி பத்து நிமிடங்கள் வாயினுள் வைத்து கொப்பளிக்க வேண்டும்.
இவ்வாறு செய்வதன் மூலம் அனைத்து பக்டீரியாக்களும் வெளியேறி பற்கள் ஆரோக்கியமாகும். முடிந்தால் தினமும் காலை வேளைகளில் வேப்பங்குச்சி கொண்டு பல் துலக்கி வந்தால் பற்களில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளும் குணமாகும் .
அளவுக்கு அதிகமாக இனிப்பு கலந்த உணவுகளை உட்கொள்ளாமல் இருப்பது, பற்களின் ஆரோக்கியத்திற்கு மேலதிகமாக வலு சேர்கின்றது.