பிரசவத்திற்கு பின் ஏற்படும் தழும்புகள் தவிர்க்க முடியாதவை. எல்லா பெண்களுக்கும் அது ஏற்படுகிறது. கர்ப்ப காலத்தில் குழந்தையானது உள்ளே வளர்வதற்க உடல் வேகமாக வளர்ந்து விரிவடையும்.
அதே சமயம் குழந்தை பிறந்தவுடன் வயிற்றில் இருந்த, இறுக்கத் தன்மை குறைந்து தோல் சுருக்கமாகவோ, அல்லது தழும்புகள் ஏற்பட்டது போலவோ காணப்படும்.
இந்த தழும்புகள் குறித்த கவலை பெரும்பாலான பெண்களுக்கு இருக்கிறது. இனி இதை சீர் செய்யும் வழிகளை பார்ப்போம். உள்ளங்கையில் சிறிதளவு ஒலிவ் எண்ணையை எடுத்து மெதுவாக வயிறு மற்றும் இடுப்பு பகுதியில் இரண்டு நிமிடங்கள் மசாஜ் செய்து வர வேண்டும்.
இவ்வாறு செய்து வரும் போது இரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும். இதனால் செல்கள் வேகமாக செயற்பட ஆரம்பிக்கும். தழும்புகளும் மறைய ஆரம்பிக்கும்.
அதேபோல் யோகா எனும் உடற்பயிற்சிகளும், மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. அதாவது நடைப்பயிற்சி, யோகா போன்றவை இடுப்பு தொடை மற்றும் வயிற்று பகுதிகளில் இருக்கும் தசைகளை வலுப்படுத்தும்.
தசைகள் வலுவானால் தளர்ந்து போன சருமம் சரியாகி விரைவில் குணமாகும். மேற்குறிப்பிட்ட வழிமுறைகளை பின்பற்றி வந்தால் பெண்களுக்கு பிரசவத்திற்கு பின்னரான தழும்புகள், தோல் சுருக்கங்களிலிருந்து தீர்வு உண்டாகும்.