குழந்தைகளுக்கு எல்லா ஊட்டச் சத்துக்களும் நிறைவாக கிடைக்கும் உணவு தாய்ப்பால் மட்டுமே. குழந்தைக்கு எளிதில் ஜீரணமாக கூடிய உணவும் தாய்ப்பால் தான்.
மற்றைய உணவுகளை உண்ணக் கூடிய திறன் வரும் வரை தாயின் பாலே முதன்மையான உணவாகும். குறிப்பிடட காலம் வரை தாய்ப்பாலை ஊட்டுவது குழந்தையின் வளர்சிக்கு அவசியமானது.
தாயிடமிருந்து கிடைக்கும் இந்த இயற்கையான உணவு குழந்தைகளுக்கு அவசியமானதுமாகிறது.
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு பால் அதிகமாக சுரக்க பட்டாணி மற்றும் பச்சை பயறு தட்டைப் பயறு போன்றவற்றை ஊறவைத்து தாளித்து சாப்பிட்டு வரலாம்.
இதில் ப்ரோட்டின் சத்து அதிகம் உள்ளதால் பால் சுரப்பு அதிகமாகும். அதேபோல் வேக வைத்த வேர்க்கடலை தினமும் மாலை நேரத்தில் சாப்பிட்டு வர பால் சுரப்பு அதிகமாகும். அதேபோல் இறைச்சி வகைகள் உட்கொள்ளவேண்டும்.
மேலும் கருவாடு மீன் முடடை போன்றவற்றயும் உணவில் கடடாயம் சேர்த்து கொள்ளவேண்டும். காய்கறி வகைகளிலும் பார்க்க இறைச்சி வகைகளில் அதிகம் பால் சுரக்கும் தன்மை இருப்பதாக சொல்லப்படுகிறது.
அதேபோல் கருப்பட்டியில் உள்ள இரும்புசத்து தாய்ப்பாலை சுரக்க செய்வதுடன் தாய்ப்பால் வழியாக குழந்தைகளுக்கும் போய் சேருகிறது. மேற்சொன்ன வழிமுறைகளை கையாண்டு கொள்வதன் மூலம் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை கொள்வோம்.