High blood pressure during pregnancy எனப்படும் உயர் இரத்த அழுத்தமானது, வயதுடன் தொடர்புடைய பாதிப்பு அல்ல. பெண்கள் பொதுவாக ஹைப்பர் டென்ஷனால் (hyper tension) பதிப்படைவார்கள். இதனால் சிறுநீரக பாதிப்பு மற்றும் பிறக்கும் குழந்தையின் எடையில் குறைபாடு போன்ற சிக்கல்கள் உருவாகின்றன.
எனவே கர்பிணிப் பெண்கள் தங்களதும், குழந்தையினதும் ஆரோக்கியத்தை கவனத்தில் கொண்டு தங்களது இரத்த அழுத்த நிலையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது மிக அவசியமாகிறது.
அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம்.
முதலில் சாப்பாட்டில் உப்பின் அளவை குறைக்க வேண்டும். கர்ப்பிணி பெண்களின் சாப்பிடும் உணவில் உப்பின் அளவு அதிகமாகும் போது உயர் இரத்த அழுத்தமானது அதிகமாகிறது.
எனவே சாப்பாட்டில் உப்பின் அளவை குறைப்பது அவசியமாகிறது. மேலும் கடைகளில் விற்கப்படும் பக்கட் உணவுகளில் அதிகளவு சோடியம் சேர்க்கப்படுகிறது. எனவே அவ்வகை உணவுகளையும் தவிர்ப்பது அவசியமாகின்றது.
அதே நேரம் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க பொட்டாசியம் பெரிதும் பயன்படுகிறது. இந்த பொட்டாசியம் சத்தானது பல வகையான பழங்கள் மற்றும் காய்கறிகளில் அதிகம் நிறைந்துள்ளது.
குறிப்பாக வாழைப்பழம், காராமணி, சர்க்கரை வள்ளி கிழங்கு , சிவப்பு பீன்ஸ், உலர் திராட்சை, தக்காளி போன்றவற்றில் அதிகளவு பொட்டாசியம் நிறைந்துள்ளது.
இவற்றையெல்லாம் கர்ப்பிணிப் பெண்கள் தமது உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். மேலும் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ள தானியங்களையும் அதிகளவு உட்கொள்வதன் மூலம் கர்ப்ப காலத்தில் ஏற்படும் உயர் அழுத்தத்தை குறைத்துக் கொள்ளலாம்.