தேவையான பொருட்கள்
மைதா - 500 கிராம் (8 நாண்)
ஈஸ்ட் - ¼ தேக்கரண்டி (வெதுவெதுப்பான சீனி சேர்த்த தண்ணீர் கலந்து 8 நிமிடம் வைத்து இருக்கவும்.)
வெண்ணெய் - 1 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
செய்முறை
மைதா ,நெய் , உப்பு, ஈஸ்ட் தண்ணீர் இவற்றைச் சேர்த்து நன்றாக பிசையவும்.
பின்பு ஈரத் துணி போட்டு மூடி தனியே 2 மணி நேரம் அடுப்புச்சூட்டில் வைத்தால் மா நன்கு பதத்திற்கு வரும்
அந்த மாவை அளவான உருண்டைகளாக உருட்டி எடுத்து கனமான பலகையில் உருண்டைகளாக உருட்டி தோசைக்கல்லில் போட்டு சப்பாத்தி மாதிரி எடுக்கலாம் அல்லது தந்தூரி அடுப்பிலும் போட்டும் எடுக்கலாம்.
சுவையான நாண் ரெடி