T20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகல் டுபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய விளையாட்டு மைதானங்களில் இடங்களில் நடைபெற்று வருகின்றன.
இந்த போட்டிகளில் விளையாடும் 12 அணிகளும் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன், ஒரு முறை மோத வேண்டும். 2 பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெறும். இதில் குழு 1ல் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டன. இந்நிலையில், குழு 2ல் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதியில் விளையாட தகுதி பெற்றுள்ளன. நடப்பு சாம்பியன் மேற்கிந்திய தீவுகள் பலம் வாய்ந்த இந்தியா மற்றும் இலங்கை ஆகிய அணிகள் தொடரில் இருந்து வெளியேறியுள்ளன. இதேவேளை அபுதாபியில் 10ம் திகதி நடைபெறும் முதல் அரையிறுதியில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. துபாயில் 11ம் திகதி நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில் பாகிஸ்தான், அவுஸ்திரேலியா ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிகளில் வெற்றி பெரும் அணிகள் எதிர்வரும் 14 ம் திகதி இறுதி போட்டியில் விளையாடும் என்பதுடன் இந்த நான்கு அணிகளில் இதுவரை நியூசிலாந்து அணி மட்டுமே T20 கிண்ணம் எதனையும் கைப்பற்றாத அணி என்பதும் குறிப்பிடத்தக்கது