நடப்பு T20 உலகக்கிண்ண தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடின. இதில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளது.
இந்நிலையில் நியூசிலாந்து அணியின் வெற்றியை பாராட்டி டுவீட் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சச்சின் டெண்டுல்கர் தனது பதிவில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அற்புதமான கிரிக்கெட் ஆட்டம் இது. நியூசிலாந்து அணி ஆட்டத்தில் வெற்றி பெற்றது மட்டுமல்லாது நம் இதயங்களை மீண்டும் ஒருமுறை வென்றுள்ளது. மிட்செல் அற்புதமாக விளையாடினார். அவருக்கு கான்வே மற்றும் நீஷம் சிறப்பான ஒத்துழைப்பைக் கொடுத்தனர். இந்த ஆட்டத்தில் சில தருணங்கள் எனக்கு 2019ம் ஆண்டு இடம்பெற்ற 50 ஓவர் உலகக்கிண்ண இறுதிப் போட்டியை நினைவுபடுத்தியிருந்தது என சச்சின் தெரிவித்துள்ளார்.