பொடுகு பிரச்சினையும் அடியோடு ஒளிகிறது . வெந்தயம் குளிர்ச்சி தன்மை உடையது என்பதால், சிலருக்கு உடல் சூட்டினால் முடி உதிர்வு பிரச்சினை ஏற்படும். அவர்கள் கூட இந்த வெந்தய ஷாம்புவை பயன்படுத்தினால் உடல் சூடு தணியும். அதேபோல் முடி உதிர்வு பிரச்சினையும் சரியாகும். சரி, இப்போது வெந்தய ஷாம்புவை எவ்வாறு தயார் செய்வது என்று இப்போது பார்ப்போம்.
1) வெந்தயம் - ஒரு சிறிய கப்,
2) கற்றாழை ஜெல் - ஒரு சிறிய கப்,
3) Liquid Castile Soap அல்லது Baby Shampoo ஒரு சிறிய கப்,
4)Tree Essential Oil - 2 அல்லது 3 துளிகள் .
ஒரு பாத்திரத்தை எடுத்து கொள்ளுங்கள். அவற்றில் ஒரு சிறிய கப் அளவு வெந்தயம் எடுத்துக்கொள்ளுங்கள். இந்த வெந்தயத்தில் அரை கப் தண்ணீர் ஊற்றி பின்பு அவற்றை அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க வைத்து கொள்ளுங்கள். தண்ணீர் நன்றாக கொதிக்க வைத்த பிறகு அவற்றை வடி கட்டிக் கொள்ளுங்கள்.
பின்பு மற்றொரு பாத்திரத்தை எடுத்து கொள்ளுங்கள். அவற்றில் 1/4 கப் கொதிக்க வைத்த வெந்தய நீர், 1/4 கப் கற்றாழை ஜெல் , 1/4 - Liquid Castile Soap அல்லது Baby Shampoo 1/4 கப் மற்றும் இரண்டு அல்லது மூன்று துளிகள் Tree Essential Oil சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை தலை குளிப்பதற்கு முன் தலையில் சேர்த்து சிறிது நேரம் நன்றாக மசாஜ் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு தலை தேய்த்து குளிக்கவும்.
இந்த வெந்தய ஷாம்புவை (Natural Shampoo) வாரத்தில் இரண்டு முறை பயன்படுத்தி வர தலைமுடி மின்னல் வேகத்தில் வளரும். பொடுகுத் தொல்லையும் நீங்கும். அதேபோல் பேன் தொல்லையுள்ளவர்களுக்கும் இது நல்ல தீர்வைத் தருகிறது. எனவே மேற்சொன்ன வழிமுறைகளை பின்பற்றி வெந்தய ஷாம்புவை பயன்படுத்தி தலைமுடியின் அழகையும் ஆரோக்கியத்தையும் பேணுவோம்.