பளபளப்பான சருமத்தைப் பெற, தினமும் பாலை முகத்தில் தடவி வர வேண்டும். இதன்மூலம் கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகள் ஆகிய பிரச்சனைகளை குணப்படுத்த முடிகின்றது.
உருளைக்கிழங்கை அரைத்து அவற்றில் பால் கலந்து முகத்தில் தடவி வர முகத்தில் இருக்கும் தழும்புகள் மற்றும் கரும்புள்ளிகள் மறையும். அல்லது பசும்பாலை காய்ச்சாமல் அப்படியே முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவலாம்.
பாலில் இருக்கும் லக்டிக் அமிலம் சருமத்தை வறட்சி அடையாமல் இருக்க உதவுகிறது. மேலும் சருமத்தில் வறட்சியின் காரணமாக, சரும விரிசல் பிரச்சனைகளை சரி செய்ய பால் உதவுகிறது. எனவே பாலை தினமும் உடலில் தடவிவர சருமம் பளபளப்பாகவும், மென்மையாகவும் மற்றும் அழகாகவும் காணப்படும்.
தினமும் பாலை முகத்தில் தடவிவர வேண்டும். இவ்வாறு செய்வதால் முகத்தில் தோன்றும் இறந்த செல்களை வெளியேற்றி, புதிய செல்களை பிறக்க வைப்பதுடன் முகம் பளபளக்க செய்யும்.
அதுமட்டும் இன்றி முகத்தில் ஏற்படும் தேமல்கள், அலர்ஜி ஆகிய பிரச்சனைகளை குணப்படுத்தவும் பால் மிகவும் உதவுகிறது.
பஞ்சை பாலில் நனைத்து முகத்தில் துடைத்த பின் ஐந்து நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகம் கழுவினால், முகத்தில் உள்ள அழுக்கு மற்றும் இறந்த செல்களை இலகுவாக அகற்றி விடலாம். தினமும் இதைச் செய்தால் முகம் பளிச்சென இருக்கும்.
குங்குமப்பூவை பாலுடன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து கழுவ, குங்குமப்பூவில் உள்ள ப்ளீச்சிங் தன்மையினால், சருமத்தில் உள்ள கருமை நீங்குவதோடு, சருமத்தின் நிறமும் மேம்பட்டு காணப்படும். அதிலும் இந்த செயலை தினமும் ஒருவர் பின்பற்றினால், சீக்கிரம் வெள்ளையாவதைக் காணலாம்.