பொதுவாக முருங்கையில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. இதன் இலை, வேர், காய், பூ என அனைத்திலும் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. இதில் முருங்கைப் பூவைத் தேநீராக பருகினால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன.
தற்போது அவை என்னென்ன என்பதைத் தெரிந்து கொள்வோம்.
முருங்கைப்பூ தேநீரை எவ்வாறு தயாரிப்பது?
முருங்கைப்பூவை தண்ணீரில் இட்டு நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும். தேநீர் நன்றாகக் கொதித்தவுடன் இதில் கற்கண்டு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இதனை பாலில் இட்டும் கொதிக்க வைத்துப் பயன்படுத்தலாம்.
இதில் உள்ள நன்மைகள் :
முருங்கைப்பூவில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. இது பக்டீரியா, வைரஸ்கள் மற்றும் பூஞ்சைகளை எதிர்க்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. இதனால் காய்ச்சல், சளி, உடலில் உண்டாகும் பூஞ்சைப் பாதிப்புகள் தடுக்கப்படுகின்றன.
சிலருக்கு இரவு நேரத்தில் நான்கு, ஐந்து தடவைகள் கூட சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படும். இதிலிருந்து விடுபட வேண்டுமென்றால், இந்த முருங்கைப்பூ தேநீரைப் பருகலாம்.
சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த முருங்கைப்பூ தேநீர் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. இது சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது.
முருங்கைப்பூ தேநீரைப் பருகுவதால் காய்ச்சல், சளி போன்ற பாதிப்புகளில் இருந்தும் விடுபட முடிகிறது. இது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருகின்றது.