Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
03
ஆண்கள் சரும அழகை பேண அருமையான அழகு குறிப்புகள்..

Sooriyan fm Gossip - ஆண்கள் சரும அழகை பேண அருமையான அழகு குறிப்புகள்..Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

710 Views
இப்போதெல்லாம் பொதுவாக வெயில் காலமென்றாலே வெளியில் அலைந்து திரிந்து வேலை பார்க்கும் ஆண்களுக்கு சருமம் எப்போதும் வறண்டும், கருமையாகவும் காணப்படும். காரணம் அந்தளவிற்கு  வெயில் தாக்கம் தான்.
இருப்பினும் ஆண்கள் தங்கள் சரும அழகை பற்றி பொதுவாக அக்கறை கொள்வதில்லை. இருந்தாலும் ஆண்கள் தங்கள் சரும அழகை பேண சில அழகு குறிப்புக்களை இன்றைய பதிவில் இப்போது பார்ப்போம். இதற்கு தேவையானவை ..

*அரிசி மாவு - இரண்டு தேக்கரண்டி
*தேன் - ஒரு தேக்கரண்டி
*காய்ச்சாத பால் - தேவையான அளவு ஆகியனவாகும்.

ஒரு பாத்திரத்தில் இரண்டு தேக்கரண்டி அரிசிமாவு, ஒரு தேக்கரண்டி தேன், மற்றும் சிறிதளவு  காய்ச்சாத பசும்பால் ஆகியவற்றை நன்கு கலந்து கொள்ளவும்.

பின்னர் இந்த கலவையை ஆண்கள் தங்களது சருமத்தில் பூசி சிறிது நேரம் அப்படியே வைத்திருக்கவும். பின்பு சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும் .

இவ்வாறு ஆண்கள் வாரத்தில் இரண்டு முறை செய்துவர ஆண்களின் சருமம் சிவப்பாகும். அதேபோல இன்னும் ஓர்  அழகு குறிப்பு பார்ப்போம்.  

அதனை செய்வதற்கு தேவையானவை
*கேரட் - ஒன்றினை பொடிதாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
* தக்காளி - ஒன்றினை பொடிதாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
*காய்ச்சாத பசும் பால் - தேவையான அளவு ஆகியனவாகும்.

இப்போது மிக்ஸியை எடுத்து அதில் நறுக்கி வைத்துள்ள கேரட் மற்றும் தக்காளி ஆகியவற்றை தண்ணீர் ஊற்றாமல் அரைத்து ஒரு சுத்தமான பாத்திரத்தில் இடவும். பின்னர் அரைத்த இந்த கலவையை தேவையான அளவு எடுத்துக்கொள்ளவும்.

பின்னர் அதில் காய்ச்சாத பசும் பாலை சிறிதளவு கலந்து சருமத்தில் தடவி ஐந்து நிமிடம் வரை மசாஜ் செய்து வரவேண்டும். அப்படியே இருபது நிமிடங்கள் வரை வைத்திருந்து பின்பு சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

இவ்வாறு தினமும் செய்துவர ஆண்களின் சருமம் பொலிவுடனும் புத்துணர்ச்சியுடனும் காணப்படும். எனவே ஆண்கள் மேற்சொன்ன வழிமுறைகளை பின்பற்றி  சரும அழகை பேணலாம்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top