பெண்கள் தமது முகத்தினை அழகுபடுத்தி கொள்வதற்கு பியூட்டி பார்லர் (beauty parlour) செல்வதை வழக்கப்படுத்தி கொள்கின்றனர். பியூட்டி பார்லர் (beauty parlour) செல்வதையே விரும்பிக்கொள்கின்றனர்.
ஆனால் அங்கு இரசாயன கலவைகள் (chemical mixed cosmetic creams ) நிறைந்த பொருள்களையே அதிகம் பயன்படுத்துவதால் நம் சருமமானது நாளடைவில் சுருக்கம் , முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள் போன்ற ஏராளமான பிரச்சினைகளை சந்திப்பதற்கு அதிகம் வாய்ப்புள்ளது.
எனவே வீட்டிலுள்ள இயற்கை பொருட்களே நமது முகத்திற்கு பேரழகை கொடுக்கும். சரி இப்போது அதனைப்பற்றி பார்ப்போம்.
இதற்கு தேவையானவை
முள்ளங்கி - 1/2 தயிர் - 1 தேக்கரண்டி சிவப்பு சந்தன பவுடர் - 1 தேக்கரண்டி உருளைக்கிழங்கு - 1 ஆகியனவாகும். முதலில் தடடை வடிவம் கொண்ட பலகையினை எடுத்துக்கொள்ளவும்.
அந்த பலகையில் உருளைக்கிழங்கை இரண்டு பாதியாக வெட்டி அதில் ஒரு பாதியினை எடுத்துக்கொள்ளவும். பின்னர் அந்த துண்டினை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். அடுத்து 1/2 முள்ளங்கியினை எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.
பின்னர் நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கு மற்றும் முள்ளங்கியினை ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து கொள்ளவும்.
பின்னர் அரைத்துவைத்துள்ள இந்த கலவையில் ஒரு தேக்கரண்டி அளவிலான தயிரை சேர்த்துக்கொள்ளவும். அவ்வாறு தயிர் சேர்த்த பிறகு ஒரு தேக்கரண்டி சிவப்பு சந்தன பவுடர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இப்போது முக சருமத்தை ஜொலிக்க வைக்கும் கலவை தயார். இக்கலவையை முகத்தில் பூசி ஐந்து நிமிடங்கள் வரை அப்படியே வைத்திருந்து ஐந்து நிமிடங்களின் பின் முகத்தினை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
இதனை முயற்சி செய்து பாருங்கள். நிச்சயம் சரும அழகில் சிறந்த மாற்றத்தை காணலாம். எனவே மேற்சொன்ன வழிமுறைகளை பின்பற்றி தங்கம் போல் ஜொலிக்கும் சரும அழகை பேணுவோம்.