தேவையான பொருட்கள்
வறுத்த சாமை - 2 கப்
வறுத்த பொட்டுக்கடலை - 2/3 கப்
கடலை மாவு - 1 தேக்கரண்டி
அரிசி மாவு - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
பெருங்காயத்தூள் - சிறிதளவு
மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
பூண்டு - 6 பல்
எள் - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
காய்ச்சிய வெண்ணெய் - ¼ கப்
செய்முறை
முதலில் பூண்டை நன்றாக அரைத்து கொள்ளவும்.பின்னர் பொன்னிறமாக வறுத்த சாமை மற்றும் பொட்டுக்கடலையை நன்றாக அரைத்தவுடன் சலித்தெடுத்து அதனுடன் கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, பெருங்காயத்தூள்,மிளகாய்த்தூள், அரைத்த பூண்டு, எள் ஆகியவற்றைச் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பிறகு அதில் காய்ச்சிய வெண்ணெயை ஊற்றி மாவை நன்கு கலந்து அத்துடன் தண்ணீரைச் சிறிது சிறிதாகத் தெளித்து சரியான பதம் வரும் வரைக்கும் பிசைந்து கொள்ள வேண்டும்.
பின் பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடனாதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து மாவை முறுக்கு அச்சில் போட்டு பிழிந்து பொரித்தெடுக்க வேண்டும்.இறுதி வரைக்கும் அடுப்பை மிதமான சூட்டிலேயே வைத்திருக்க வேண்டும்.இப்போது சூப்பரான சாமை ரிப்பன் பக்கோடா தயார்.