Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
14
அழகுக்கு அழகு சேர்க்கும் சில அசத்தலான குறிப்புக்கள்..

SooriyanFM Gossip - அழகுக்கு அழகு சேர்க்கும் சில அசத்தலான குறிப்புக்கள்..Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

666 Views
முகம் எப்போதும் அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை யாருக்கு தான் இருக்காது? உங்கள் சரும அழகை பராமரிக்க இந்த பதிவில் இருக்கும் குறிப்புக்களேயே உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த செய்முறைகளுக்கு நீங்கள் எந்த செலவும் செய்ய தேவையில்லை. நீங்கள் அன்றாடம் செய்யும் வேலைகளையே சரியாக செய்தலே போதும். முகமானது அழகாக மாறிவரும்.

சரி இப்போது அவை என்ன என்பது பற்றி பார்ப்போம். முதலில் முகத்தை எப்போதும் சுத்தமாக வைத்திருப்பது அவசியம். தூங்குவதற்கு முன்பாகவும் தூங்கி எழுந்த பிறகும் சருமத்தை தூய நீரில் கழுவ வேண்டும். முகத்தில் இரசாயனம் கலந்த கிரீம் வகைகளை பூசியிருந்தால் தூங்கும் முன் அதனை நீக்கி விடுவது நல்லது.

ஏனெனில் இரவில் தூங்கும் போது தான்  சருமத்தில் புதிய செல்கள் உருவாகிறது. முகத்திற்கு அடிக்கடி ஒப்பனை போடுவதால் பருக்கள் கரும்புள்ளிகள் போன்றவை ஏற்படுகின்றன.

சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை வெளிக்கொண்டு வருவதற்கு ஒரு பாத்திரத்தில் ஒரு தேக்கரண்டி அரிசிமாவு  ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் ஒரு தேக்கரண்டி பால் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

பின்னர் இந்த கலவையை முகத்தில் பூசி ஏறத்தாழ இருபது நிமிடங்கள் வரை ஊற விட்டு பின்னர் முகத்தினை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இதனை வாரத்தில் நான்கு நாட்கள் செய்து வர முகம் எப்போதும் இளமையாக இருக்கும்.

பனி காலத்தில் ஒரு சிலருக்கு உதட்டில் வறட்சி ஏற்படும். அதனை தடுப்பதற்கு உதட்டில் தினசரி தேன் தடவி வரலாம். தேன் உதடு வறட்சியை தடுப்பதற்கு மட்டுமன்றி உதட்டில் ஏற்படும் கருமையை நீக்கி இயற்கையாகவும் சிவப்பாகவும் வைத்திருக்க உதவுகின்றது.

எனவே மேற்சொன்ன வழிமுறைகளை பின்பற்றி இளமையும் அழகும் மிக்க சருமத்தை பேணுவோம்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top