இனிவரும் காலங்களில், தொடர்ந்து வில்லி வேடத்தில் தான் நடிப்பேன்’’ என்று வனிதா விஜயகுமார் கூறியுள்ளார்.
‘தில்லு இருந்தா போராடு’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, எளிமையான முறையில் சென்னையில் நடந்தது. விழாவில் வனிதா விஜயகுமார் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே, இதனைக் கூறினார்.
‘‘சினிமாவில் எனக்கு கிடைத்த இடத்தை நான் கோட்டை விட்டு விட்டேன். முட்டாள்தனம் பண்ணி விட்டேன். இதை மிக தாமதமாக உணர்ந்தேன். இனிமேல், விட்ட இடத்தை பிடிக்கப் போகிறேன்.
இந்த படத்தின் டைரக்டர் முரளிதரன் என்னிடம் வந்து கதை சொன்ன போது, ‘பஞ்சாயத்து பரமேஸ்வரி’ என்ற வில்லி வேடத்தில் நடிக்க முடியுமா? என்று தயங்கி தயங்கி கேட்டார். நடிக்கிறேன் என்று நான் சொன்னதும், அவர் முகம் மலர்ந்தது.
வில்லி வேடத்தில் நடிக்க எனக்கு எந்த தயக்கமும் இல்லை. தொடர்ந்து வில்லியாக நடிக்க முடிவு செய்து இருக்கிறேன். இந்த படத்தில் எனக்கு ‘பஞ்சாயத்து பரமேஸ்வரி’ என்ற வில்லி வேடம். இதற்காக மோட்டார் சைக்கிள் ஓட்ட வேண்டும் என்றார்கள்.
எனக்கு கார் ஓட்ட தெரியும். வேகமாக ஓட்டுவேன். ஆனால், ‘பைக்’ ஓட்ட தெரியாது. படத்துக்காக புல்லட் ஓட்ட ஒரு நண்பரிடம் கற்றுக் கொண்டேன். படத்தில் நான் புல்லட் ஓட்டி வரும் காட்சி, ‘பந்தா’வாக இருக்கும். உலக மகா வில்லியாக தெரிவேன்’’ என்று வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.