இந்திய கிரிக்கெட் அணி தென் ஆபிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கிடையிலான 3 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரை தென் ஆபிரிக்கா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில் இந்தியா- தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று தொடங்கவுள்ளது.
இந்நிலையில் இன்று தொடங்கும் ஒருநாள் தொடரில் இருந்து தென் ஆபிரிக்க அணியின் முக்கிய வீரரான ககிசோ றபாடா வெளியேற்றப்பட்டுள்ளார். இதுகுறித்து தென் ஆபிரிக்க கிரிக்கெட் வாரியம் கூறுகையில், றபாடா தொடர்ந்து பல போட்டிகளில் விளையாடி வருவதால் அவருக்கு சுமை அதிகரித்துள்ளது. இதனால் அவருக்கு ஓய்வு அளிக்கும் வகையில் அணியில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.’ என தெரிவித்துள்ளது.