குடைமிளகாய் பன்னீர் மசாலா இலகுவாக செய்யக்கூடிய ஒரு உணவுப்பொருளாகும்.
தேவையான பொருட்கள்
பன்னீர் - 200 கிராம் நறுக்கியது
குடைமிளகாய் - 1 நறுக்கியது
வேகவைத்த பட்டாணி - 50 கிராம்
வெங்காயம் - 2 பொடியாக நறுக்கியது
தக்காளி - 1 நறுக்கியது
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மசாலா தூள் - 1 தேக்கரண்டி
பட்டை - 1
கிராம்பு - 2
ஏலக்காய் - 1
பிரியாணி இலை - ௧
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை என்பவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள்.
பின்னர் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள், வெங்காயம் வதங்கியதும் அதில் குடைமிளகாய் சேர்த்து வதக்குங்கள்.
வெங்காயம் பொன்னிறமானதும் அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.பிறகு வேகவைத்த பட்டாணி சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள். அடுத்து உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சப்ஜி மசாலா தூள் சேர்த்து வதக்கவும்.
பின்னர் நறுக்கிய பன்னீரை சேர்த்து வதக்கவும்.
இப்போது சுவையான குடைமிளகாய் பன்னீர் தயார்!