செரிமான கோளாறு உள்ளவர்கள், காய்ச்சலால் அவதிப்படுபவர்கள் அரிசி பாசிப்பருப்பு மிளகு சீரக கஞ்சியை அருந்தலாம்.
அதோடு சளி, இருமல் பிரச்சனை உள்ளவர்களுக்கும் இந்த கஞ்சி ஏற்றது.
முதலில் தேவையான பொருட்கள் :
புழுங்கல் அரிசி – ஒரு கப்,
சீரகம் – ஒரு டேபிள்ஸ்பூன்,
மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்,
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை,
வெந்தயம் – ஒரு டீஸ்பூன்,
பாசிப்பருப்பு – 25 கிராம்,
தயிர் – ஒரு கப் (கடைந்தது),
உப்பு – தேவையான அளவு,
செய்முறை:
புழுங்கல் அரிசியை பாத்திரத்தில் வறுத்து மிக்ஸியில் போட்டு ரவை போல உடைத்துக்கொள்ளவும்.
வெறும் பாத்திரத்தில் பாசிப்பருப்பு, வெந்தயத்தை லேசாக வறுத்து, ஒன்றிரண்டாக மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும்.
அனைத்தையும் ஒன்றுசேர்த்து, 2 கப் நீர் விட்டு, மஞ்சள்தூள், உப்பு, மிளகுத்தூள், சீரகம் சேர்த்து, குக்கரில் வைத்து 5 விசில் வரும் வரை வேகவிட்டால்… நன்றாக குழைந்து வெந்துவிடும்.
பிறகு, இறக்கி வைத்து, கடைந்த தயிர் கலந்து பரிமாறவும்.
சூப்பரான அரிசி மிளகு சீரக கஞ்சி ரெடி.