Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
31
நாவூறும் நண்டு குருமா செய்து சாப்பிடுங்கள்

sooriyanfm gossip - நாவூறும் நண்டு குருமா செய்து சாப்பிடுங்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

246 Views
உங்களுக்கு வாரந்தோறும் சிக்கன், மட்டன், மீன் போன்றவற்றை சாப்பிட்டு போர் அடித்துவிட்டதா? அப்படியெனில் இந்த வாரம் சற்று வித்தியாசமாக நண்டு செய்து சுவைத்துப் பாருங்கள்.
 ஏனெனில் நண்டு நாவிற்கு விருந்து கொடுக்கும் வண்ணம் வித்தியாசமான சுவையுடன் இருப்பதோடு, உடலுக்கு ஆரோக்கியமானதும் கூட. இதற்கு காரணம் நண்டில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள் தான். குறிப்பாக நண்டு, பனிக்காலத்திற்கு ஏற்ற நல்ல உணவு. சளி, தொண்டைக் கோளாறுகள் இருப்போர் நண்டு சாப்பிட்டால் அப்பிரச்னைகள் பறந்துபோகும். அதிலும் நண்டில் கனிமச்சத்துக்கள் தான் அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது. மேலும் இதில் கொழுப்புக்கள் மற்றும் கலோரிகள் மிகவும் குறைவாக உள்ளது. எனவே ஊட்டச்சத்துக்கள் நிறைந்த நண்டை வைத்து நண்டு குருமா செய்வது எப்படி? என பார்க்கலாம். தேவையான பொருட்கள்: நண்டு - 1 கிலோ வெங்காயம் - 2 தக்காளி - 1 பச்சைமிளகாய் - 2 தேங்காய் பால் - 2 டம்ளர் இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி கொத்தமல்லிதழை - சிறிதளவு கறிவேப்பிலை - ஒரு கொத்து மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி கரம் மசாலாத்தூள் - ½ தேக்கரண்டி எண்ணெய் - 100 ml உப்பு - தேவையான அளவு அரைக்க தேவையானவை: தேங்காய் துருவல் - ஒரு கப் மஞ்சள்தூள் - 1 தேக்கரண்டி மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி மல்லித்தூள் - 3 தேக்கரண்டி சீரகத்தூள் - 2 தேக்கரண்டி சோம்புத்தூள் - 1 தேக்கரண்டி முந்திரி - 10 பாதாம் - 6 பூண்டு - 5 பல் செய்முறை: நண்டை நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்து கொள்ளவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும். அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும். அரைத்த மசாலாவை பாத்திரத்தில் எடுத்து தேங்காய் பாலுடன் மேலும் இரண்டு டம்ளர் தண்ணீர், சிறிதுளவு உப்பு சேர்த்து கரைத்து விட்டு கொத்தமல்லிதழையை சேர்த்து கொள்ளவும். ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி, அரை ஸ்பூன் உப்பும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அனைத்தும் நன்கு வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும். இப்போது கரைத்து வைத்திருக்கும் கலவையை ஊற்றி நண்டை சேர்த்து கொதிக்க விடவும். நன்றாக கொதித்து பச்சை வாசனை போனவுடன் கொத்தமல்லித்தழை தூவி இறக்கினால் சுவையான நண்டு குருமா ரெடி.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top