Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
05
கருவளையம் குறித்து இனி கவலை வேண்டாம்!

Sooriyan FM Gossip - கருவளையம் குறித்து இனி கவலை வேண்டாம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

349 Views
முகத்திலுள்ள அழகை வெளிப்படுத்துவதில் எமது கண்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். எனினும் பல பெண்களின் முக அழகை வெளிப்படுத்துவதற்கு அவர்களது   கருவளையம் பெரும் தடையாக அமைந்து விடுகின்றது. கருவளையம் எமது கண்களை சுற்றி வட்ட வடிவத்தில் தோற்றமளித்து பொலிவிழந்த சருமத்தை தருகின்றது. எனவே இன்றைய அழகுக்குறிப்பு  பகுதியில் கருவளையத்தில் இருந்து எம்மை பாதுகாத்துக் கொள்வதற்கான வழிமுறைகளை அறிந்து கொள்வோம். 
போதுமான அளவு தூக்கமின்மை காரணமாகவே அதிகமானவர்களுக்கு கருவளையம் தோன்றுகின்றது. எனவே அன்றாடம் 8 மணிநேர தூக்கம் என்பது கட்டாயமானதாகும்.

உணவு உட்கொள்ளும் போது அதிக அவதானம் தேவை. போதுமான ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உண்பவர்களுக்கு கருவளையம் தோன்றுவது அரிதானதாகும்.

அதிக வெப்பமான காலநிலையில் போது வெள்ளரிக்காயை வட்ட வடிவில் வெட்டி, எமது கண்களுக்கு மேல்பக்கத்தில் வைப்பது நன்மையளிக்கும். இது கருவளையத்தில் இருந்து எம்மை பாதுகாப்பதுடன், உடலுக்கு தேவையான குளிர்ச்சியினையும் தருகின்றது.

எமக்கு இலகுவாக கிடைக்கக்கூடிய கற்றாழை ஜெல்லை வைத்துக்கொண்டு கருவளையத்தை சுலபமாக நீக்கிக் கொள்ளலாம். இந்த கற்றாழை ஜெல்லை கருவளையம் உள்ள இடத்தில் சுமார் 15 நிமிடங்களுக்கு பூசி மசாஜ் செய்து, பின்னர் குளிர்ந்த நீரால் கழுவி வர வேண்டும். இதன் மூலமாக கருவளையம் விரைவாக மறைந்து விடும்.

மஞ்சளுடன் சிறிதளவு சுத்தமான தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் கலந்து கருவளையம் உள்ள பகுதிகளில் பூசி, சில நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரினால் கழுவ வேண்டும். இதனை வாரத்தில் மூன்று நாட்களுக்கு செய்தாலேயே போதுமானதாகும். கண்களை சுற்றியுள்ள கருவளையம் விரைவில் நீங்கும்.

எலுமிச்சை சாற்றில் விட்டமின் சி அதிகம் காணப்படுவதால், கண்களை சுற்றி எலுமிச்சை பழத் துண்டுகளை வெட்டி வைத்துக் கொள்ளலாம். எனினும் கண்களின் உட்பகுதியில் எலுமிச்சை சாறு செல்லாதவாறு கவனமாக பயன்படுத்த வேண்டும்.

எனவே மேற்சொன்ன இலகுவான வழிமுறைகளை வீட்டில் இருந்தவாறே செய்து, எமது கருவளையத்தை நீக்கி சருமத்தை பேணிப்பாதுகாத்திடுவோம்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top