முகத்தின் அழகை மேலும் அழகாக்குவது மொழுமொழுவென இருக்கும் கன்னங்கள் ஆகும். எப்போதுமே ஆப்பிள் போல் கன்னங்கள் இருப்பது அழகுதான். எனவே அத்தகைய ஆப்பிள் போன்ற கன்னங்களை பெற உதவும் சில அழகுக்குறிப்புகளை இன்றைய இந்த பதிவில் பார்ப்போம்.
தினமும் பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, சாரைப் பருப்பு, முந்திரிப் பருப்பு ஆகியவற்றில் ஒவ்வொன்றை எடுத்து சுடுநீரில் ஊறவைத்து, அதில் ஒரு பருப்பை மட்டும் அரைத்து முகத்தில் பூசிவிட்டு, மீதமுள்ள மூன்று பருப்புக்களையும் உண்ண வேண்டும். எமது சருமத்தில் எண்ணெய் பசை சுரப்பதற்கு இந்தப் பருப்பு வகைகள் பெரிதும் உதவுகின்றன. இதனால் முகச் சுருக்கங்கள் மறைவதுடன், ஒடுங்கிய தாடைப் பகுதியில் சதை அதிகரித்து கன்னங்கள் தங்கம் போல் தக தகவென மின்னும்.
அதேபோல, மூன்று ஆப்பிள் துண்டுகள், மூன்று கரட் துண்டுகள் ஆகியவற்றை துருவி ஜூஸ் தயார் செய்து, அதனுடன் பாதி எலுமிச்சை சாறும் கலந்து தினமும் காலையில் குடித்து வர, கன்னங்களில் சதை அதிகரித்து கன்னங்களின் நிறம் மற்றும் பளபளப்பும் அதிகரிக்கும்.
மேலும் ஒரு குவளை பாலில், ஒரு தேக்கரண்டி வெண்ணெய், ஒரு தேக்கரண்டி தேன், இரண்டு துண்டு வெண்ணெய் கட்டி, ஒரு தேக்கரண்டி ஓட்ஸ் ஆகியன சேர்த்து கலந்து தினமும் காலையில் உண்பதுடன் ஒரு குவளை ஆரஞ்சு மற்றும் ஆப்பிள் ஜூஸ் குடித்து வந்தாலே போதும். சதைப் பிடிப்புடன் கூடிய அழகான கன்னங்கள் காணப்படும்.
அதேபோல, தினமும் உணவில் பால், வெண்ணைக்கட்டி மற்றும் நீர்ச்சத்து நிறைந்த ஆகாரங்களை உண்ணாதிருப்பதும் கன்னங்கள் ஒட்டிப்போவதற்கு ஒரு காரணம் ஆகும். இதனால் சருமம் வறண்டு, உதடுகள் வெடிப்புக்கு உள்ளாகும். அதனால் தினமும் உணவில் உலர்ந்த பழங்கள் மற்றும் அதிகளவு தண்ணீரும் அருந்திவர வேண்டும். இதனால் செழுமைமிக்க மொழுமொழுவென்ற அழகிய கன்னங்களை பெறலாம்.
தினமும் குளிப்பதற்கு முன்னர் ஒரு தேக்கரண்டி வெண்ணெயுடன் சிறிது சர்க்கரை சேர்த்து கன்னங்களில் தேய்த்து வர, ஒட்டிய கன்னங்கள் மொழுமொழுவென மாற ஆரம்பிக்கும்.
மேலும், நல்லெண்யுடன் தேனும் ஒரு தேக்கரண்டி சேர்த்து வாயில் கொப்பளிப்பது ஒட்டிய கன்னம் உள்ளவர்களுக்கான ஓர் பயிற்சியாக இருக்கும்.
அதேபோல, ஆப்பிளை சிறு சிறு துண்டுகளாக அரைத்து, கன்னப் பகுதியிலிருந்து காது வரை பூசி தினமும் 'பேஷியல் ஸ்ட்ரோக்' கொடுத்து வந்தால் ஒரே வாரத்தில் அழகான கன்னங்களை பெறலாம்.
அதேபோல ஒரு தேக்கரண்டி தேனுடன், அரைத்த பப்பாளி விழுதும் ஒரு தேக்கரண்டி சேர்த்து பத்து நிமிடங்கள் 'பெக்' போல போட்டு பின்னர் கழுவ வேண்டும். தேன் சருமத்தின் சுருக்கங்களைப் போக்கி, கன்னத்தை பளபளப்பாக்கும் தன்மை கொண்டதாக மாற்றுகின்றது.
மேலும் ஒரு தேக்கரண்டி பால், ஒரு தேக்கரண்டி வெண்ணெய், ஒரு தேக்கரண்டி பார்லி தூள் ஆகியவற்றை சிறிய பாத்திரத்தில் எடுத்து நுரை வரும் வரை நன்கு கலக்க வேண்டும். இந்த கலவையை முகம், கழுத்து, மற்றும் கண்களை சுற்றி அனைத்து பகுதிகளிலும் பூச வேண்டும். அரை மணி நேரத்தின் பின்னர் வெதுவெதுப்பான நீரில் சுத்தம் செய்ய வேண்டும்.
இவ்வாறு செய்துவர கன்னங்கள் வெண்மையுடனும், பொலிவுடனும் பிரகாசமாகவும் காணப்படும். எனவே மேற்சொன்ன வழிமுறைகளை பின்பற்றி வர ஆப்பிள் போன்ற அழகிய கன்னங்களை
பெறலாம்