Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
22
உடற்பயிற்சி செய்வதனால் இத்தனை நன்மைகளா?

Sooriyan FM Gossip - உடற்பயிற்சி செய்வதனால் இத்தனை நன்மைகளா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

655 Views
உடற்பயிற்சி என்பது எமது உடல் நலத்தினை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்கு உதவுகின்ற செயற்பாடுகளுள் ஒன்றாகும். நடத்தல், ஓடுதல், நீந்துதல்,குதித்தல், விளையாடுதல், நடனமாடுதல் மற்றும் யோகாசனம் செய்தல் போன்ற அனைத்து உடலசைவுகளும் உடற்பயிற்சிகளே.

உடற்பயிற்சி செய்வதன் மூலம் எமது உடலை எப்பொழுதும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும் குறிப்பாக உடற்பயிற்சியை மேற்கொள்கின்ற வேளையில் உடலிலும், மனதிலும் காணப்படும் சோர்வு நிலை நீங்கி புத்துணர்வு ஏற்படும்.

தினசரி உடற்பயிற்சி செய்கின்றபொழுது இரத்த ஓட்டம் அதிகரித்து உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் கடத்தப்படும். இதன் மூலம் உடலியக்கம் சீராக இடம்பெறும்.

இரத்த அழுத்தம், நீரிழிவு போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து உடற்பயிற்சியினை மேற்கொள்ளும்பொழுது குறித்த நோய்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும்.

தினசரி 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வதன் மூலம், உடல் மற்றும் மூளை புத்துணர்வுடனும், ஆரோக்கியமாகவும் இருக்கும். மேலும் எமது மனநிலையினை நன்றாக வைத்துக்கொள்ளவும் உதவுகின்றது.

ஆரோக்கியமான உடல் எடையோடு இருப்பதுதான் அனைவரின் கனவு. இதை அடைவதற்கு உடற்பயிற்சி மிகவும் உறுதுணையாக இருக்கின்றது. குறிப்பாக தேவையான உடற்பயிற்சியுடன் சரியான உணவை எடுத்துக்கொண்டால் போதும், உடல் கட்டமைப்பை நாங்கள் சிறப்பாக பேணிக்கொள்ள முடியும்.

உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடற்சோர்வு குறைவடையும் இதன்காரணமாக நாங்கள் தினசரி செய்யும் வேலைகளை அதிக ஈடுபாட்டுடன் மேற்கொள்ள முடியும்.

தினமும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் எமது உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அத்துடன் இதய ஆரோக்கியத்தையும் சிறப்பான முறையில் பேணிக்கொள்ள முடியும்.

உடற்பயிற்சி செய்வதன் மூலம் எமது வாழ்நாளை அதிகரித்துக்கொள்ள முடியும். குறிப்பாக எமது உடலும் மனமும் வலுப்பெறுவதன் மூலம் எமது வாழ்நாள் தானாகவே அதிகரித்துவிடும்.

எமது உடல் ஆரோக்கியத்தை சிறந்தவகையில் பேணுவதற்கு உடற்பயிற்சி மிக முக்கியமானது எனவே தவறாது உடற்பயிற்சியினை மேற்கொள்வதன் மூலம் சிறந்த உடல் ஆரோக்கியத்தை நாங்கள் பேணிக்கொள்ள முடியும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top