2022 IPL தொடரில் ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்ததன் காரணமாக தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் T20 உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை மீண்டும் பெற்றார்.
T20 உலகக் கிண்ணத் தொடர் முடிவடைந்த பின்னர் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த நிலையில் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பயிற்றுவிப்பாளர்கள்,சக வீரர்கள்,நண்பர்களுக்கு நன்றி தெரிவித்து தோனியை போலவே வீடியோ ஒன்றை தினேஷ் கார்த்திக் பதிவிட்டுள்ளார்.
இது ரசிகர்களில் மத்தியில் அவர் தன் ஓய்வினை அறிவித்துவிட்டாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. அந்த வீடியோவில் அவர் தெரிவித்ததாவது - எனது நாட்டுக்காக T20 உலகக் கிண்ணத் தொடரில் விளையாட வேண்டும் என்ற இலக்கை நோக்கி மிகக் கடுமையாக உழைத்தேன்.அப்படி செய்வது பெருமையான உணர்வை தந்துள்ளது.
எங்களது முயற்சியில் நாங்கள் கடைசி கட்டத்தில் வீழ்ந்தோம். ஆனாலும் அது என் வாழ்நாளில் மறக்க முடியாத பல நினைவுகளை கொடுத்துள்ளது என்று நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.