தெலுங்கு சினிமா சூப்பர் ஸ்டார் என அறியப்படும் நடிகர் கிருஷ்ணா நவம்பர் 15-ம் திகதி மாரடைப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.அவரது மறைவுக்கு திரைத்துறையினர்,ரசிகர்கள்,அரசியல் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்திருந்தனர்.இந்நிலையில்,நடிகர் மகேஷ் பாபு தனது ட்விட்டர் பக்கத்தில் தந்தை குறித்து உருக்கமான பதிவை பகிர்ந்துள்ளார்.
அதில், “உங்கள் வாழ்க்கை கொண்டாடப்பட்டது.உங்களின் மறைவு அனுசரிக்கப்பட்டது.அது உங்களின் மகத்துவம்.நீங்கள் பயமின்றி உங்கள் வாழ்க்கையை வாழ்ந்தீர்கள்.துணிச்சல் உங்களின் இயற்கையான குணம்.என்னுடைய உத்வேகம் நீங்கள்.என் தைரியம் நீங்கள்.என்னுடைய எல்லாமுமாக இருந்த நீங்கள் சென்றுவிட்டீர்கள்.ஆனால் விசித்திரமாக,நான் இதுவரை உணராத வலிமையை என்னுள் உணர்கிறேன்.
இப்போது நான் அச்சமின்றி இருக்கிறேன்.உங்கள் ஒளி என்னுள் என்றென்றும் பிரகாசிக்கும்.உங்கள் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்வேன்.உங்களை மேலும் பெருமைப்படுத்துவேன்...லவ் யூ நானா.. லவ் யூ என் சூப்பர் ஸ்டார்" என்று மகேஷ் பாபு பதிவிட்டுள்ளார்.