முந்தைய பிதாமகன், தெய்வத்திருமகள், அந்நியன், பீமா, ஐ, இருமுகன், கடாரம் கொண்டான், பொன்னியின் செல்வன் போன்ற பல திரைப்படங்களில் இதை பார்க்கக்கூடியதாக இருக்கும். இப்போது 'தங்கலான்' திரைப்படத்திலும் தன்னை உருமாற்றியுள்ளார்.
இந்த திரைப்படத்தை பா.ரஞ்சித் இயக்கி வருகிறார்.கோலார் தங்க வயலில் பணியாற்றிய தமிழர்களின் அவல நிலையை சித்தரிக்கும் கதையம்சத்தில் தயாராவதாக சொல்லப்படுகிறது.
இந்த படத்துக்காக விக்ரம் சட்டை அணியாமல் கையில் ஆயுதம் ஏந்தி கொண்டு நிற்கும் தோற்றம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்த தோற்றத்துக்கு விக்ரம் 4 மணி நேரம் மேக்கப் போட்டு நடிப்பதாக இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.