பெண்கள் தமது அழகை இயற்கையான முறையில் பாதுகாத்துக் கொள்வதற்கு கஸ்தூரி மஞ்சள் சிறந்ததாகும். இலகுவான முறையில் எமது சரும அழகை மெருகேற்றிக் கொள்வதற்கு, கஸ்தூரி மஞ்சள் எவ்வாறு பயன்படுகின்றது என்பதைப் பற்றி, இன்றைய அழகுக்குறிப்புப் பகுதியில் தெரிந்து கொள்வோம்.
கஸ்தூரி மஞ்சளை தூளாக அரைத்து, முகத்தில் பூசி, நன்கு காய்ந்த பின்னர் மிதமான வெந்நீரால் கழுவி வர, சருமம் பளபளப்பாகக் காணப்படும்.
பெண்கள், கஸ்தூரி மஞ்சளை தூளாக அரைத்து உடல் முழுவதும் பூசி, நன்கு மசாஜ் செய்த பின்னர் குளிப்பதால் சருமத்தில் காணப்படும் அனைத்து கிருமிகளும் அழிந்து, பொலிவான சருமத்தைப் பெறலாம்.
கஸ்தூரி மஞ்சளை தூளாக அரைத்து, நன்கு சலித்து வைத்துக்கொள்ளவும். இதனுடன் சிறிதளவு தேனையும் கலந்து உண்பதால், உடல் ஆரோக்கியம் மேம்படுவதுடன், சருமமும் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.
கஸ்தூரி மஞ்சள் தூளுடன் சிறிதளவு தேங்காய் எண்ணெயையும் கலந்து சருமத்தில் பூசி வர, தழும்புகள் அனைத்தும் மறைவதுடன், உடலில் காணப்படும் அனைத்து காயங்களும் விரைவாக மறையும்.
முகம் கழுவும் நேரங்களில், பெண்கள் கஸ்தூரி மஞ்சளை தூளாக அரைத்து, முகப்பருக்கள், கரும்புள்ளிகள் உள்ள இடங்களில் பூசி நன்கு காய்ந்த பின்னர், குளிர்மையான நீரால் கழுவி வர சருமம் பொலிவாகக் காணப்படும்.
எனவே மேற்சொன்ன வழிமுறைகளைப் பின்பற்றி, எமது சரும அழகை பாதுகாத்துக் கொள்வோம்.