Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
10
முடி உதிர்வைத் தடுப்பதற்கான சிறந்த தீர்வு!

SooriyanFM Gossip - முடி உதிர்வைத் தடுப்பதற்கான சிறந்த தீர்வு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

535 Views
நாம் தினசரி எமது உணவுத் தேவைக்காகப் பயன்படுத்தும் கறிவேப்பிலையில் பலவித மருத்துவ நலன்கள் உள்ளடங்கியுள்ளன. கறிவேப்பிலையானது எமது உடலில் இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகின்றது அத்துடன் நல்ல கொழுப்புகளை அதிகரித்து இதயநோய் ஏற்படாமல் பாதுகாக்கின்றது.

கறிவேப்பிலையானது எமது செரிமானத் தொகுதியின் செயற்பாட்டை சிறந்தவகையில் பேணக்கூடியது. குறிப்பாக தலைமுடி வளர்ச்சிக்கு உதவக்கூடிய மூலிகையாகவும் கறிவேப்பிலை உள்ளது. கறிவேப்பிலையானது முடி உதிர்வைத் தடுப்பதோடு மாத்திரமல்லாமல் இளநரை ஏற்படாமலும் தடுக்கின்றது.

கறிவேப்பிலையில் Vitamin A அதிகளவில் நிறைந்துள்ளது. இதனை அதிகளவில் உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் பார்வைக் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டு, பார்வைத்திறனை மேம்படுத்திக்கொள்ள முடியும்.

கறிவேப்பிலையானது உடல் எடையைக் குறைக்கும் மூலிகைகளில் ஒன்று. உடற்பருமன் உள்ளவர்கள் கறிவேப்பிலையை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவருவதன் மூலம் சிறந்த பலனை பெற்றுக்கொள்ள முடியும்.

இரும்புச்சத்துக் குறைபாடுதான் இரத்தச்சோகை ஏற்படுவதற்கு பிரதான காரணமாகும். எனவே கறிவேப்பிலையில் இரும்புச்சத்து அதிகம் உள்ளமையினால் தினமும் இதனை உட்கொண்டுவருவதன் மூலம் இரத்தச்சோகை பாதிப்பிலிருந்து விடுபட முடியும்.

கறிவேப்பிலையானது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் திறனைக்கொண்டது. குறிப்பாக நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் கறிவேப்பிலையை சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவினை சீராகப் பேணிக்கொள்ள முடியும்.

கறிவேப்பிலையில் பக்டீரியா மற்றும் நுண்ணுயிர்களை எதிர்க்கும் பண்புகள் அதிகம் உள்ளமையினால், பற்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் சிறந்தவகையில் உதவிபுரிகின்றது.

தினசரி உணவில் கறிவேப்பிலையை சேர்த்துக்கொள்வதன் மூலம் சிறந்த ஆரோக்கிய நலன்களை நாங்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு



Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top