50 வயதை கடந்த நெதர்லாந்து நாட்டை சேர்ந்த 9 தோழிகள் இளம் பெண்களை போன்று அதிவேகமாக சுமார் 600 கிலோமீட்டர்கள் துவிச்சக்கர வண்டியினை செலுத்தி அசத்தியுள்ளனர்.
நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டம் நகரைச் சேர்ந்த கரோலின் வேன்டிஸ் என்ற 61 வயதான பெண் தன்னுடன் படித்த தோழிகள் 9 பேரை ஒன்றிணைத்து கல்வி அமைப்பு ஒன்றை உருவாக்கியுள்ளதுடன் உலகம் முழுவதும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள நாடுகளுக்கு சென்று அங்குள்ள வறுமையான குழந்தைகளுக்கு உதவி செய்து வருகின்றார். இந்த 9 பேரில் மருத்துவர்கள், பொறியாளர்கள், விஞ்ஞானிகள், வழக்கறிஞர்கள், தகவல் தொழில் நுட்ப வல்லுனர்கள் ஆகியோரும் உள்ளதுடன் அவர்களுக்கு திருணமாகி மகன், மகள்கள், பேரக்குழந்தைகள் என தனித்தனியாக வாழ்ந்தது வரும் நிலையில் , ஏழை மாணவர்களுக்கு உதவுவதற்காக தற்போது ஒன்று சேர்ந்துள்ளனர். இந்த நிலையில் உலகம் முழுவதும் ஒவ்வொரு நாடாக சென்று சைக்கிளில் சுற்றுப்பயணம் செய்து வரும் இவர்கள் தற்போது இந்தியாவின் தமிழகத்தில் தங்களது பயணத்தை தொடர்ந்துள்ளனர். தமிழகத்தின் முக்கியமான நகரங்களினூடாக தங்களது பயணத்தை ஆரம்பித்த இவர்கள் 600 கிலோ மீட்டர் தூரத்தினை துவிச்சக்கர வண்டியில் பயணித்து கடக்கவுள்ளனர். வயதான காலத்திலும் இவ்வாறு உதவி செய்து வரும் இவர்களின் இந்த செயல் தொடர்பில் அதிகமாக பேசப்படுவதுடன் வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன. அத்துடன் இது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன.