இதற்கமைய, நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கட் தொடருக்கான இந்திய அணியை ரோஹித் சர்மா வழிநடத்தவுள்ளார்.
அதேநேரம் 20 க்கு 20 தொடருக்கான இந்திய அணியின் தலைவராக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை அணிக்கு எதிரான 20 க்கு 20 தொடரைப் போன்று, நியூஸிலாந்து அணிக்கு எதிரான 20 க்கு 20 தொடரிலும், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் உள்ளீர்க்கப்படவில்லை.
இந்திய - நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான கிரிக்கட் தொடர், எதிர்வரும் 18ம் திகதி ஹைதராபாத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இதேவேளை, அடுத்த மாதம் இடம்பெறவுள்ள அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் தலைவராக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
சூரியகுமார் யாதவ், முதல் முறையாக டெஸ்ட் குழாமில் இணைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது