Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
17
வித்தியாசமான சுவையில் தேங்காய் பால் உப்புமா...!

sooriyanfm gossip - வித்தியாசமான சுவையில் தேங்காய் பால் உப்புமா...!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

535 Views
காலையில் மிகவும் இலகுவாக செய்யக்கூடிய ரெசிபியைத் தான் இன்று பார்க்கப் போகின்றோம். 
காலை வேளையில் எளிதில் செய்து முடிக்கக்கூடிய ஒரு ரெசிபி தான் உப்புமா.

பொதுவாக உப்புமா செய்ய அனைவருக்குமே தெரியும். ஆனால் இன்று தேங்காய் பால் பயன்படுத்தி எவ்வாறு உப்புமா செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்: ரவை - 1 கப், கடுகு - 1/2 தேக்கரண்டி, உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி, கடலைப் பருப்பு - 1 தேக்கரண்டி, வரமிளகாய் - 2 கறிவேப்பிலை - சிறிது வெங்காயம் - 1 (நறுக்கியது) பச்சை மிளகாய் - 2 துருவிய தேங்காய் - 2 தேக்கரண்டி, நெய் - 2 தேக்கரண்டி, எண்ணெய் - 2 தேக்கரண்டி, தண்ணீர் - 1/2 கப்

செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் ரவையை போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.

பின்னர் அதே பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து பொன்னிறமானதும், வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்பு அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். வதங்கிய பின்பு தேங்காயை மிக்ஸியில் போட்டு, அதில் தண்ணீர் ஊற்றி அரைத்து தேங்காய் பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து, அந்த தேங்காய் பாலை பாத்திரத்தில் ஊற்றி, உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும். இறுதியில் வறுத்து வைத்துள்ள ரவையை பாத்திரத்தில் சேர்த்து, நெய் ஊற்றி ஒருமுறை கிளறி, மூடி வைத்து 5-6 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

பாத்திரத்தில் உள்ள நீர் வற்றியதும் இறக்கினால் போதும்,சூப்பரான ரவை தேங்காய் பால் உப்புமா தயார் !!!

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு



Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top