Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
25
சத்து நிறைந்த பச்சை பயறு சட்னி ...!

sooriyan gossip - சத்து நிறைந்த பச்சை பயறு சட்னி ...!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

343 Views
நாம் வீட்டில் காலை உணவாக அல்லது இரவு உணவாக இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற உணவுகளை செய்யும் பொழுது.
ஒரு சுழற்சி முறையில் தேங்காய் சட்னி. தக்காளி சட்னி என மாற்றி மாற்றி இந்த இரு சட்னிகளை வைத்து மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் உங்களுக்கு புதியதாக ஏதேனும் சட்னி வைக்க வேண்டும் என விரும்புகிறீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த பச்சை பயறு சட்னியை செய்து பாருங்கள்.

பாசி பயறை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கின்றது. மேலும் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் படிவதையும் தடை செய்கின்றது.

தேவையான பொருட்கள்: பச்சை பயறு - 1 கப் ,தேங்காய் - 2 துண்டு, புளி - தேவையான அளவு, பூண்டு - 2 பல் சீரகம் - 1/2 தேக்கரண்டி, வரமிளகாய் - 6 பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி, உப்பு - தேவையான அளவு, தாளிக்க கடுகு, உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி, வர மிளகாய் - 2 கறிவேப்பிலை - 1 கொத்து எண்ணெய் - தாளிக்க.

செய்முறை - பச்சை பயறை நன்கு சுத்தம் செய்து, நீரில் 3-4 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் சீரகம், வரமிளகாய் சேர்த்து வறுத்து ஆறியதும் மிக்ஸியில் போட்டு, அத்துடன் பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும்.

பின்பு அதனுடன் ஊற வைத்துள்ள பச்சை பயிறை போட்டு அதனுடன் பூண்டு, புளி, தேங்காய் சேர்த்து நன்கு அரைக்க வேண்டும். பின் அதில் எலுமிச்சை சாறு, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து கொள்ளவும்.

பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் போட்டு தாளித்து சட்னியில் சேர்க்கவும். இப்போது சூப்பரான பச்சை பயறு சட்னி தயார்!!!

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top