Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
26
உலகின் பழமையான எரிகல் கண்டுபிடிப்பு..

sooriyanfm gossip - உலகின் பழமையான எரிகல் கண்டுபிடிப்பு..Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

382 Views
சுமார் 800 கோடி சனத்தொகையை கொண்ட இந்த பூமியில் நமக்கு தெரியாத எத்தனையோ மர்மங்கள் மறைந்து இருக்கின்றது.

இந்த மர்ம முடிச்சுகளை அவிழ்க்க விஞ்ஞானிகள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். பூமியின் தோற்றம், பரிணாமம் உள்ளிட்டவைகளை கணிக்க ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளதாக விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

இப்போது விஞ்ஞானிகள் கையில் கிடைத்திருக்கும் ஒரு விண்கல் ஓரளவு பூமியின் ஜாதகத்தை கணிக்க உதவக்கூடும் என்று நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

பூமியின் தென்துருவமான அண்டார்டிகா, மனிதர்கள் வாழ முடியாத அளவிற்கு மிகவும் குளிரான பிரதேசமாகும்.

அந்தப் பகுதியில் பல்வேறு நாட்டு விஞ்ஞானிகள் புவியின் தன்மை மற்றும் மாற்றங்கள் குறித்த பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

அண்டார்டிகா பகுதியில் இதுவரை 600க்கும் மேற்பட்ட விண்கற்கள் கிடைத்துள்ளன. அது மனிதர்கள் வாழ்வதற்கான ஒரு சிறந்த இடமாக இல்லாவிட்டாலும் கூட, விண்கற்களுக்கு மிகவும் ஏதுவான ஒரு இடமாக திகழ்கிறது.

பெரும்பாலான விண்கற்கள் கருப்பு நிறத்தில் இருப்பதால், பனிமூட்டமான இடங்களில் மற்றும் ஐஸ் பாறைகளில் இருந்து அவற்றை கண்டுபிடிப்பது மிகவும் எளிமையான விடயமாகும்.

புளூ ஐஸ் பகுதி எனப்படும் பெல்ஜியம் பிரின்சஸ் எலிசபெத் அண்டார்டிகா பகுதியில் தற்போது 5 புதிய விண்கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அதில் ஒரு கல் 7 கிலோ எடையில் உள்ளது. இதுவரை கிடைத்த விண்கற்களிலேயே இது தான் பெரியது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இது தொடர்பாக விரிவாக விளக்கம் அளித்துள்ளார் மரியா ஷோய்ன் பேச்லர் என்ற விஞ்ஞானி. இந்த கல் ஆராய்சிக்கு உட்படுத்தப்பட்டால் , பூமியின் தோற்றம் குறி்த்த அதிகாரப்பூர்வ உண்மைகள் கூட கிடைக்கலாம்.

ஏனென்றால் பூமி தோன்றியதாய் கருதப்படும் 450 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தை சேர்ந்த கல்லாக இது இருக்க வாய்ப்பு உள்ளது.

என்று மரியா ஷோய்ன் கூறியுள்ளார்.
\r\n
இந்த கல்லை தொடர்ந்து ஆராய்ச்சிக்கு உட்படுத்தி பல புதிய விடயங்களை கண்டுபிடிக்க ஆர்வமாக இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top