இந்நிலையில் இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதல் இருபதுக்கு இருபது போட்டி கடந்த 27 ஆம் திகதி ராஞ்சியில் இடம்பெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 176 ஓட்டங்களை எடுத்தது. 177 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 155 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.
இந்திய அணி சார்பாக பந்து வீச்சில் இரண்டு விக்கெட்டுக்களையும் துடுப்பாடத்தில் அரைசத்தையும் பெற்றுக்கொடுத்தார் சகலதுறை வீரர் வொஷிங்டன் சுந்தர்.
இதன் மூலம் இந்தியாவை 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றிபெற்றது. நியூசிலாந்து அணி தொடரில் 1 -௦ என முன்னிலை வகிக்கின்றது.
இந்நிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது T20 போட்டி லக்னோவில் இன்று இரவு 7 மணிக்கு இடம்பெறவுள்ளது. இதில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்துடன் இந்திய அணி களம் காண்கிறது.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் நியூசிலாந்து அணியும் உள்ளது.தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.