பெண்களது முகத்தில் அதிக முகப்பருக்கள் காணப்பட்டால், அவை நாளடைவில் பல தழும்புகளை உருவாக்கக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. முகத்தில் காணப்படும் தழும்புகள், முகத்தின் அழகை வெளிப்படுத்துவதற்கு தடையாக இருக்கும். எனவே முகத்திலுள்ள தழும்புகளை இயற்கையான முறையில் எவ்வாறு நீக்கலாம் என்பதைப் பற்றி இன்றைய அழகுக்குறிப்புப் பகுதியில் தெரிந்து கொள்வோம்.
தினமும் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் வரை உடற்பயிற்சி செய்வதை நாம் வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். உடற்பயிற்சி செய்வதால் ஆரோக்கியம் மேம்படுவதுடன், சருமத்தில் காணப்படும் தேவையற்ற அழுக்குகள் வெளியேறி முகம் பொலிவாகக் காணப்படும்.
இரவில் தூங்குவதற்கு முன்னர் சிறிதளவு டீ-ட்ரீ எண்ணெயை (Tea Tree Oil) எடுத்து, தழும்புகள் காணப்படும் இடங்களில் பூசி நன்கு மசாஜ் செய்த பின்னர் மறுநாள் காலையில் மிதமான வெந்நீரால் முகத்தைக் கழுவி வர, முகத்தில் காணப்படும் தழும்புகள் விரைவாக மறையும்.
வெளியில் சென்று வீட்டிற்கு வந்த பின்னர், குளிர்ந்த நீரால் முகத்தை சுத்தமாகக் கழுவ வேண்டும். இது எமது முகத்தில் காணப்படும் கிருமிகளை அழித்து சருமத்தைப் பாதுகாக்கின்றது.
முகப்பருக்களையும், தழும்புகளையும் கைகளால் தொட்டுப் பார்ப்பதை முற்றாகத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
அரிசி மாவுடன் சிறிதளவு தண்ணீரையும் சேர்த்து பேஸ்ட் போன்று கலந்து, முகத்தில் பூசி 20 நிமிடங்கள் வரை நன்கு மசாஜ் செய்த பின்னர், மிதமான வெந்நீரால் முகத்தைக் கழுவி வர, தழும்புகள் அனைத்தும் இலகுவாக மறைந்து, முகம் பிரகாசமாகக் காணப்படும்.
எனவே மேற்சொன்ன வழிமுறைகளைப் பின்பற்றி எமது சரும அழகை மெருகேற்றிக் கொள்வோம்.