இயற்கையான முறையில் எமது அழகை மேம்படுத்திக் கொள்வதற்கு உதவும் சில குறிப்புக்களை இன்றைய அழகுக்குறிப்புப் பகுதியில் தெரிந்து கொள்வோம்.
நெல்லிக்காயின் விதைகளை நீக்கிய பின்னர் நன்கு அரைத்து, குளிப்பதற்கு அரைமணிநேரத்திற்கு முன்னர் தலையில் பூசி நன்கு மசாஜ் செய்த பின்னர் குளிப்பதனால் பொடுகுத்தொல்லையில் இருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.
கடலைமாவுடன், சிறிதளவு எலுமிச்சம் பழச்சாற்றையும் கலந்து, உடலில் பூசி குளிப்பதனால், சருமம் பளபளப்பாகக் காணப்படும். அத்துடன் அவ்வப்போது கோதுமை மாவையும் உடலில் பூசி குளிப்பதனால், சருமம் பொலிவாகக் காணப்படும்.
வாரத்தில் இருமுறை ஆவிபிடிப்பதால் சருமத்தில் காணப்படும் அழுக்குகள் அனைத்தும் நீங்கி, சருமம் பொலிவாகக் காணப்படும்.
பீர்க்கங்காயை அரைத்து சருமத்தில் பூசி நன்கு காய்ந்த பின்னர் குளிப்பதனால், சருமம் பிரகாசமாகக் காணப்படும்.
சிறிதளவு வேப்பிலையை தண்ணீருடன் சேர்த்துக் கொதிக்க வைத்து அந்த நீரில் முகத்தை சுத்தமாகக் கழுவி வர, சருமம் பளபளப்பாகக் காணப்படும்.
எலுமிச்சம் பழச்சாற்றுடன் சிறிதளவு துளசி இலைகளையும் சேர்த்து நன்கு அரைத்த பின்னர், முகத்தில் பூசி மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் குளிர்மையான நீரால் முகத்தைக் கழுவி வர, சருமம் மென்மையாகக் காணப்படும்.
ஒப்பனை (Makeup) செய்வதற்கு முன்னர் முகத்தில் பன்னீரைப் பூசுவதனால், சருமம் பாதுகாக்கப்படும்.
எனவே மேற்சொன்ன வழிமுறைகளைப் பின்பற்றி எமது அழகைப் பாதுகாப்போம்.