பெண்கள் வீட்டில் இருந்தவாறே தமது சருமத்தை எவ்வாறு பராமரித்துக் கொள்ளலாம் என்பதைப் பற்றி இன்றைய அழகுக்குறிப்புப் பகுதியில் தெரிந்து கொள்வோம்.
இரண்டு தேக்கரண்டி சர்க்கரை, சிறிதளவு கற்றாழை ஜெல், பசுப்பால் ஆகியவற்றை கலந்து முகத்தில் பூசி நன்கு மசாஜ் செய்த பின்னர் மிதமான வெந்நீரால் முகத்தைக் கழுவி வர, சருமம் மென்மையாகக் காணப்படும்.
எலுமிச்சம் பழச்சாற்றுடன் சிறிதளவு கடலை மாவையும் கலந்து முகத்தில் பூசி நன்கு மசாஜ் செய்த பின்னர் குளிர்மையான நீரால் முகத்தைக் கழுவி வர, சருமம் பளபளப்பாகக் காணப்படும்.
சிறிதளவு மருதாணி இலைகளையும், குப்பைமேனி இலைகளையும் சேர்த்து நன்கு அரைத்து அதனுடன் பசுப்பாலையும் கலந்து முகத்தில் பூசி நன்கு மசாஜ் செய்த பின்னர், சுத்தமாகக் கழுவி வர, சருமம் பொலிவாகக் காணப்படும்.
தேங்காய் எண்ணெய், கஸ்தூரி மஞ்சள், பயறு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து பேஸ்ட் போல அரைத்து முகத்தில் பூசி நன்கு மசாஜ் செய்த பின்னர், குளிர்மையான நீரால் முகத்தைக் கழுவி வர, சருமம் பொலிவாகக் காணப்படும்
எனவே மேற்சொன்ன வழிமுறைகளைப் பின்பற்றி எமது சருமத்தைப் பாதுகாப்போம்.