ஸ்பெயினின் சொரியா மாகாணத்தை சேர்ந்த பெண் ஒருவர் டிக்டொக்கில், தனது 4 நண்பர்களுடன் லைவ் ஸ்டிரீமீங்கில் போட்டி ஒன்றில் பங்கேற்றார்.
அந்த போட்டியில் அதிக பார்வையாளர்களை பெறுபவரே வெற்றியாளராக அறிவிக்கப்படுவார் என்பது போட்டியின் விதிமுறையாகும்.
டிக்டொக் நேரலையில் பேசிக்கொண்டிருந்த போது, அப்பெண்ணை திடீரென அவரது கணவர் கன்னத்தல் அறைந்தார்.
இதனால், அதிர்ச்சியடைந்த அப்பெண் நேரலையில் கண்ணீர் விட்டு அழுதார். இந்த சம்பவம் டிக்டொக்கில் நேரலையாக ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது.
ஸ்பெயினில் பாலினம் சார்ந்த வன்முறைகளுக்கு எதிராக சட்டங்கள் இறுக்கமாக உள்ளன. இதனிடையே, மனைவின் கன்னத்தில் கணவன் அறைந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானது.
காணொளியைப் பார்த்த பலரும் தமது எதிர்ப்புகளை வெளியிட்டு வருகின்றனர். கணவர் மீது வழக்குத்தொடர அவரை பலரும் வலியுறுத்திய போதிலும், இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண், தனது கணவன் மீது பொலிசில் எந்த புகாரும் அளிக்கவில்லை.
ஆனால், மனைவியை கணவன் அறைந்த சம்பவத்தை பாலின ரீதியிலான வன்முறையின் கீழ் அந்நாட்டு காவல்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து, அந்த பெண்ணின் கணவரை கைது செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பெண்களுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபட்டதற்காக மனைவியை தாக்கிய கணவனுக்கு 1 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. மனைவியாகவே இருந்தாலும் அவரை தாக்கும் உரிமை இல்லையென நீதிமன்றம் அவரை கடுமையாக எச்சரித்தது.
மேலும் மனைவியுடன் 3 ஆண்டுகள் பேசுவதற்கும் தடை விதித்துள்ளது. குறிப்பிட்ட காலப்பகுதியில் அந்த நபர் எந்த ஆயுதங்களையும் வாங்கவும் தடை விதித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
இப்படியான செயலிகளில் லைவ் செல்லும்போது இதுபோன்ற பல அதிர்ச்சிகரமான சம்பவங்கள் இதற்கு முன்னரும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.