இங்கிலாந்தில் நீண்ட காலமாக ராணியாக இருந்த 2- ஆம் எலிசபெத் கடந்த ஆண்டு தனது 93-வது வயதில் காலமானார். இங்கிலாந்தில் சுமார் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிம்மாசனம் பயன்படுத்தப்படுகிறது.
புதிய மன்னர் சார்லஸ் முடி சூட்டு விழா எதிர்வருகிற மே மாதம் 6- ஆம் திகதி இடம்பெறவுள்ளது. பரம்பரை பரம்பரையாக பயன்படுத்தப்பட்டு வரும் சிறப்பு சிம்மாசனம் இங்கிலாந்து அரசாங்கத்தால் பலவருடங்களாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.
தங்க முலாம் பூசப்பட்ட இந்த சிம்மாசனம் 1308-ஆம் ஆண்டு மன்னர்கள் முடி சூட்டு விழாவுக்காக விசேடமாக தயார் செய்யப்பட்டது.
1399-ஆம் ஆண்டு முதல் முறையாக மன்னர் ஹென்றி இந்த சிம்மாசனத்தில் அமர்ந்து முடிசூட்டிக் கொண்டார்.
அதன்பிறகு 18 மற்றும் 19-ஆம் நூற்றாண்டுகளில் இந்த சிம்மாசனம் சேதம் அடைந்தது. பின்னர் இந்த சிம்மாசனத்தின் அடித்தளம் மாற்றி அமைக்கப்பட்டது.
சிம்மாசனத்தின் மூலையில் சிங்க உருவம் பொருத்தப்பட்டுள்ளது. பல சிறப்புகளை பெற்ற சிம்மாசனத்தை புதுப்பிக்கும் பணிகள் தற்போது இடம்பெற்றுவருகிறது.
மே மாதம் நடைபெறும் விழாவில் மன்னர் சார்லஸ் இதில் அமரவைக்கப்பட்டு முடி சூட்டப்படுவார். இந்த நிகழ்வை உலகம் முழுவதும் உள்ள மக்கள் நேரடியாக பார்க்க ஆவலுடன் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
மன்னரின் முடிசூட்டு விழா எளிமையான முறையில் இடம்பெறவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அதேவேளை மன்னரின் இவ்விழாவுக்கு எதிர்ப்புகளும் வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.