இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி இடம்பெற்ற இந்தூர் மைதான ஆடுகளம் மோசமானது என சர்வதேச கிரிக்கட் பேரவை மதிப்பிட்டுள்ளது.
மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 9 விக்கட்டுக்களால் வெற்றிபெற்றது.
கடந்து முதலாம் திகதி தொடங்கிய இந்தப் போட்டி நேற்று முற்பகலுடன் இரண்டரை நாட்களில் முடிவடைந்தது.
இந்த போட்டியில் சுழற்பந்துக்கு சாதகமாகவே இந்த மைதானம் இருந்த நிலையில் பெரும்பாலான விக்கட்டுகளை சுழற்பந்து வீச்சாளர்களே வீழ்த்தினர்.
இந்தநிலையில் இந்தூர் கிரிக்கட் மைதான ஆடுகளம் மிகவும் மோசமானதாகும் என்று சர்வதேச கிரிக்கட் பேரவை மதிப்பீடு செய்துள்ளது.
குறித்த போட்டிக்கு பின்னர் சர்வதேச கிரிக்கட் பேரவை நடுவர் கிரிஸ் போர்ட் இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியதை அடுத்து மைதானத்தின் தரம் குறித்த அறிக்கையை சர்வதேச கிரிக்கட் பேரவையிடம் சமர்ப்பித்துள்ளார்.
அந்த அறிக்கையின் அடிப்படையில் இந்தூர் மைதான ஆடுகளம் மிகவும் மோசமானதாகும் என சர்வதே கிரிக்கட் பேரவை தெரிவித்துள்ளது.