ஆர்ஜென்டினாவைச் சேர்ந்த 25 வயதான பெண் ஒருவர் தன்னைத் தானே திருமணம் செய்துகொண்டதாக திருமண ஆடையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களுடன் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
உலக அளவில் பெண்கள் தன்னை தானே திருமணம் செய்து கொள்வது தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகிவருகிறது. இந்த நிலையில் குறித்த பெண்ணும் தன்னைத்தானே திருமணம் செய்து கொண்டதாக கூறியிருப்பதானது சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகியுள்ளது.
தன்னைத் தானே திருமணம் செய்துகொண்டதன் பின்னர் அடுத்த 24 மணி நேரத்தில் தன்னால் திருமண வாழ்க்கையை தொடர முடியாது என்றும் சுயதிருமணம் வேண்டாம் என்றும் அதிலிருந்து எவ்வாறு விவகாரத்தைப் பெறுவது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். அவரின் இந்த பதிவுக்கு தற்போது சமூக வலைத்தளங்களில் நகைச்சுவையான விமர்சனங்கள் வந்தவண்ணமாகவுள்ளன.