இந்த விழாவில் யானைகளை பராமரிக்கும் இந்தியாவின் முதுமலை தம்பதி குறித்த 'தி எலிபெண்ட் விஸ்பர்ஸ்' ஆவண குறும்படத்திற்கு ஒஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது.
தமிழ் நாட்டின் நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் 28 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
காட்டில் தாயை பிரிந்து தவிப்பது மற்றும் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை பிடித்து, கும்கியாக மாற்றி வனத்துறையினர் பராமரித்து வருகின்றனர்.
இதில் தாயை பிரிந்து தவிக்கும் குட்டி யானைகளை வனத்துறையினர் மீட்டு முகாமுக்கு கொண்டு வருகின்றனர். மருத்துவ குழு கண்காணிப்பில் குட்டி யானைகள் வளர்க்கப்படுகிறது.
இதை பழங்குடியினத்தை சேர்ந்த பொம்மன், அவரது மனைவி ஆகியோர் பராமரித்து வந்தனர். இதை மையமாக வைத்து ஊட்டியை சேர்ந்த பெண் இயக்குநர் கடந்த 2019-ஆம் ஆண்டு " தி எலிபெண்ட் விஸ்பர்ஸ் " என்ற பெயரில் ஆவணப்படம் ஒன்றை உருவாக்கினார்.
10 பிரிவுகளுக்கான தேர்வு பட்டியலில் "தி எலிபெண்ட் விஸ்பர்ஸ் " ஆவணப்படம் இடம் பிடித்தது.
'தி எலிபெண்ட் விஸ்பர்ஸ்' ஆவண குறும்படத்தை இயக்கிய கார்திகி குன்செல்வெஸ் மற்றும் தயாரிப்பாளர் குனெட் மொன்கோ ஒஸ்கார் விருதை வென்றனர்.
"தி எலிபெண்ட் விஸ்பர்ஸ்" படக்குழுவினருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.